தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 118 பேர் தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்

cor

கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவுசெய்து மேலும் 118 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

அதன்படி கல்கந்தை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 112 பேரும் மீயாங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து நால்வரும் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இருவரும் இன்று தமது வீடுகளுக்குச் செல்லவுள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரை 29 ஆயிரத்து 757 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து வெளியேறியுள்ளனர்.

இதேநேரம் தற்போது முத்தரப்பு படைகளினால் பராமரிக்கப்பட்டு வரும் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3 ஆயிரத்து 449 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.