இன்று (செவ்வாய்க்கிழமை) காலை செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பூவரசங்குளம் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்
இன்று காலை செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபை சாலை பேருந்து பூவரசன்குளம் , சண்முகபுரம் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று இயந்திரக்கோளாறு ஏற்பட்டு வீதியைவிட்டு விலகியுள்ளது.
இதன்போது வீதியோரத்தில் மேய்ந்துகொண்டிருந்த இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளது. பேருந்தில் பயணித்த பயணிகள அதிஸ்டவசமாக எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை.
இவ்விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .