வெளிநாடுகளில் சிக்கியிருந்த 222 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

srilankan1

மூன்று நாடுகளில் இருந்த இலங்கையர்கள் நான்கு விசேட விமானங்களில் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை  வந்தடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் இரண்டாம் கட்டத்தின் ஒருபகுதியாக 222 இலங்கையர்கள்   நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார் ஏர்லைன்ஸ் விமானம்  கியூ.ஆர் -668 விமானத்தில், கட்டார்- தோஹாவிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை)அதிகாலை 1.23 மணியளவில் 42 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

மேலும், ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு சொந்தமான  ஏர்லைன்ஸ் விமானம் யு.எல்-1506 விமானத்தின் ஊடாக இலங்கையர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் யு.எல் -1102 விமானத்தில்  ஊடாக 178 இலங்கையர்கள் மாலைத்தீவிலுள்ள  மால் விமான நிலையத்திலிருந்து  மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகைதந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.