ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு நான்கு கட்சிகள் தமது முழுமையான ஆதரவை தெரிவித்த நிலையில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீங்கா பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் ஆசனங்கள் உட்பட மொத்தமாக 145 ஆசனங்களைப் பெற்றிருந்தது.எனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கவில்லை.
இந்தநிலையில் டக்ளஸ் தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி இரண்டு ஆசனங்கள், யாழில் போட்டியிட்ட அங்கஜன் ராமநாதன் பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒரு ஆசனம் என தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
அதேபோன்று கிழக்கில் பிள்ளையானுக்கு கிடைத்த ஒரு ஆசனத்தின் மூலம் அந்தக்கட்சியும் ஆதரவை தெரிவித்துள்ளது. அத்துடன் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் பெற்றுக் கொண்ட ஒரு ஆசனம் மூலம் ஆதரவு வழங்கப்பட்டதை அடுத்து அரசின் பலம் 150 ஆக அதிகரித்துள்ளது.