வெளிநாடுகளில் சிக்கியிருந்த 120 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

srilankan1

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டுக்கு திரும்ப முடியாது சிக்கித் தவித்த மேலும் 120 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர் -668 என்ற விமானத்தில் 13 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதுபோல லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து 107 இலங்கையர்களும், மேலும், இங்கிலாந்தில் தங்கியுள்ள 107 இலங்கையர்களை யுஎல் -504 என்ற விமானம் மூலம் அதிகாலை 5.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.