எனது நாட்டுக்கு என்னால் முடிந்த சேவை செய்ய எதிர்பார்க்கிறேன்; நாமல்

Namal 3
Namal 3

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைவதாக நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவர் ஆகியோருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அமைச்சு பதவி பெற்றமை தொடர்பாக ருவிட்டரில் பதிவு செய்துள்ள அவர், “அந்தஸ்து உள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமையடைகிறேன்.

என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதுடன், எனது நாட்டுக்கு என்னால் முடிந்த சேவை செய்ய எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.