நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,881ஆக அதிகரித்துள்ளது.
எகிப்தில் இருந்து இலங்கை வந்த இந்தியர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 232 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,638 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.