நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி உயர்தர புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய பரீட்சைகளுக்கான நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
பரீட்சைக்கான அட்டவணைகளை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.