விக்கி வழியில் முன்னணி – முள்ளிவாய்க்காலில் உறுதியேற்பு

cycle
cycle

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தங்கள் உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்வார்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இன்று முள்ளிவாய்க்காலில் உறுதியேற்றுள்ள நிலையில், அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் துணைப் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் தமது கட்சி உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் எதிர்வரும் சனிக்கிழமை உறுதி ஏற்பார்கள் என அறிக்கை ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளார்.