உள்நாட்டு துப்பாக்கி ஒன்று மீட்பு:மூன்று பேர் கைது!

001 225
001 225

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் மூன்று சந்தேக நபர்கள் தெனியாய மற்றும் கம்பஹா கிரிந்திவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர்களிடம் இருந்து போர வகையான 12 ரக துப்பாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று காலை காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 58 வயதுடைய சந்தேக நபரை கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள்பபட்டுள்ளன.

இதேவேளை, ஊருபொக்க-பொங்கமுவ பிரதேசத்தில் போர 12 ரக துப்பாக்கி உள்ளிட்ட 7 ரவைகள் மற்றும் 16 வெற்று ரவைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை தெனியாக விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கைது செய்யப்பட்ட நபர் 59 வயதுடைய பொங்முவ பிரதேசத்தில் வசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் ஊருபொக்க காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தெனியாய பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிவெல்தொல இங்குரலஹேன பகுதியில் வசித்து வரும் 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மொரவக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.