நிதித்துறையை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை:எம்.பி அஜித் நிவாட் கப்ரால்!

02 1 1
02 1 1

இலங்கையின் வங்கி மற்றும் நிதித்துறையை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நிதி மற்றும் மூலதன சந்தை அரச தொழில்முயற்சி சீர்திருத்த ராஜாங்க அமைச்சராக தமது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாட்டு ஏற்றுமதிகளை அதிகரிப்பதன் ஊடாக வருவாயை ஈட்ட முடியுமெனவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.