முரளிதரனுக்கு தமிழ் மக்கள் மீதான திடீர் கரிசனை

thilakaraj
thilakaraj

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ வெள்ளை வேன் கடத்தல்களில் ஈடுபட்டிருந்த போது எதனையும் கண்டுகொள்ளாதிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திடீரென மலையக மக்கள் தொடர்பில் கரிசனை வெளியிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் விசனம் வெளியிட்டுள்ளார்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதாஸவுக்கு ஆதரவை திரட்டும் வகையிலான பிரசாரக் கூட்டமொன்று நுவரெலியா – கொத்மலை நகர மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துக் கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்தம் நோக்கில் அரசியலில் ஈடுபடுவாராயின் அவருடன் பகிரங்கமாக விவாதிக்க தயார் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

குடும்ப அரசியலில் ஈடுபடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காலம் காலமாக மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.