மேலும் 494 பேர் தாயகம் திரும்பினர்

SriLanka Airlines
SriLanka Airlines

கொவிட் 19 தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 494 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 322 இலங்கையர்களும் கட்டாரில் இருந்து 22 இலங்கையர்களும் இன்று அதிகாலை இலங்கைக்கு வருகை தந்தனர்.

அத்துடன் ஓமானில் இருந்து 150 இலங்கையர்கள் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.