மீன் பிடிப்பதற்கென ஒரு சிறுவனை அழைத்துச் சென்று கொடூரமான முறையில் சித்திரவதை செய்து காயப்படுத்திய ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய மீன்பிடிப் படகின் உரிமையாளர் மற்றும் ஏனைய இரண்டு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயத்திற்காக காவல்துறையின் 4 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மேலும் இரண்டு சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கை இடம்பெறுவதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.