அனுமதியின்றி பிடித்த கடல் அட்டைகளுடன் 3 பேர் கைது

53975a6d1e41d.image
53975a6d1e41d.image

யாழ்ப்பாணம்-பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 3 பேர் ஒரு டிங்கி படகுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற் பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு கடற்படை செயற்படுகிறது அதன்படி வடக்கு கடற்படையினர் பருத்தித்துறை கடல் பகுதியில் மேற்கொண்ட தேடலின் போது அனுமதிக்கான ஆவணங்களின்றி பிடித்த 4,010 கடல் அட்டைகள் கொண்ட டிங்கி படகு ஒன்றும், 3 சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 19, 21 மற்றும் 23 வயதுடைய மூன்று சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக யாழ் மீன்வள மற்றும் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.