கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் 2 ரயில்கள் இன்று (திங்கட்கிழமை) சேவையில் ஈடுபடாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மார்க்கத்தில் கல்கமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக இன்று ரயில் சேவைகள் இடம்பெறாது என திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, 81 மற்றும் 82 இலக்கங்களை கொண்ட ரயில்களே சேவையில் ஈடுபடவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.