ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. 25ஆம் நாளான இன்றைய தினம் (18) தீர்த்தத்திருவிழாவும், மாலை கொடியிறக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது.
அதேவேளையில் ஆலய மகோற்சவ பெருவிழாவில் Covid – 19 நோய் பரவலை தடுக்கும் உபாயமாக அதிகளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்து கொள்வதற்காக நடைபெற்று கொண்டிருக்கும் 2020ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி காண்பதற்கரிய முருகப்பெருமானின் ஷண்முக தீர்த்த கேணியில் நடைபெறும் தீர்த்தோற்சவத்தினையும், தூர தரிசனம் செய்யும் பொருட்டு,
தீர்த்த தினம் இன்று இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை பக்தர்கள் தரிசிப்பதற்காக நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தினால் இலவசமாக ஆலய உத்தியோகபூர்வ “YouTube’’ தளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ/featured
ஒளிபரப்பப்படும் நேரம்
*தீர்த்தோற்சவம் – 18/08/2020 இலங்கை நேரம் காலை 5.30 – 8.30 வரை
*கொடியிறக்கம் – 18/08/2020
இலங்கை நேரம் மாலை 5.00 – 6.00 வரை