வடமாகாண ஆளுநராக வன்னி மாவட்ட கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.
இராணுவ பின்னணி உள்ளவர்கள் அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டு வருகின்ற நிலையில் , ஜனாதிபதி கோத்தாபயவின் வியத்மக அமைப்பின் செயற்பாட்டளராக இருந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவை வடக்கு ஆளுநராக ஜனாதிபதி நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.