சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை!

JNdTMPRI

இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ராவில் புதன்கிழமை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது.

10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஈ.எம்.எஸ்.சி மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்க‍ை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந் நிலையில் இந்த நிலநடுக்கம் தொடர்பில் அறிக்கையில் வெளியிட்டுள்ள இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம், ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறியுள்ளது.

EfvohozVAAAWeN9