வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திருமதி அஞ்சலா கோகிலகுமாரின் வருடாந்த நிதி ஒதுக்கீட்டில் தனது வட்டாரத்திலுள்ள உள்ளக வீதிகளுக்கு 60 மின் விளக்குகள் இன்று பொருத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் தெற்கு பிரதேசபை உறுப்பினரின் 2020 வருடாந்த நிதி ஒதுக்கீட்டில் மின் விளக்குகள் அற்ற நிலையில் காணப்படும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் பாலமோட்டை ,கிழவிகுளம் உட்பட 15 கிராமங்களிலுள்ள வீதிகளுக்கு இவ்வாறு 60 மின் விளக்குகள் பொருத்தி முடிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.