19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை இரத்துச் செய்து புதிய அரசியலமைப்பு முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு – ஒரே நீதி என்ற கொள்கை அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் கொள்கை விளக்க உரை வாசிப்பின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் பொது தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும், நாட்டில் எந்தவொரு நபருக்கும் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் இன்றி வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்திகொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.