அளுத்கம காவல் நிலையத்தில் உள்ள காவற்துறை அதிகாரி ஒருவரின் கடமை நேர துப்பாக்கி தவறி பயன்ப்படுத்தப்பட்டதில், இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ வீரரின் தந்தை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பார்ப்பதற்காக காவல்நிலையத்திற்கு இராணுவ வீரர் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.