கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டார் மற்றும் தாய்லாந்தில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 135 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, தாய்லாந்தில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான U.L – 403 எனும் விமானம் ஊடாக 88 இலங்கையர்கள் இன்று காலை 9.12 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அதேபோன்று, கட்டாரில் இருந்து 47 இலங்கையர்கள் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான Q.R – 668 அனும் விமானம் ஊடாக இன்று அதிகாலை 1.20 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ள அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.