கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி மாற்றம் – செய்தியில் உண்மையில்லை;சுமந்திரன்

tna 1
tna 1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு செல்வம் அடைக்கலநாதனும், கட்சியின் கொறடா பதவிக்கு தர்மலிங்கம் சித்தார்த்தனும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என கூறப்படுகிறது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கு இடையில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் இரா.சம்பந்தன் இந்த முடிவை அறிவித்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்த விடயங்கள் தீர்மானிக்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்டு, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரையில் இவற்றை வெளியிடுவதில்லை என்றும் செய்திகள் வெளி வந்தன.

இந்த விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனிடம் ஊடகமொன்று வினவியபோது “அவ்வாறு வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை” என கூறியுள்ளார்.