வட மாகாண ஆளுநர் புலம்பெயர் தமிழர்களை சந்தித்தார்

suren
suren

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இலண்டனுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இலண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம், விவசாயம், இளைஞர் விவகாரம் மற்றும் மீன்பிடித்துறை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் இத்துறைகளின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உதவமுடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை வட மாகாண பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறான முதலீடுகளை மேற்கொள்ள முடியும், கூட்டுறவு வங்கியின் ஊடாக வடமாகாண பாமர மக்களின் அபிவிருத்திக்கு எவ்வாறு புலம்பெயர் மக்கள் உதவ முடியும் என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.