கொரோனா வைரஸ் தொற்றினால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு காரணமாக மலேசியாவில் சிக்கித் தவித்த 291 இலங்கையர்கள் கோலாலம்பூரிலிருந்து இன்று(சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.
யுஎல் -319 என்ற விசேட விமானம் மூலம் அவர்கள் மதியம் 2 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அதனை அடுத்து தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர் என்றும் விமான நிலையத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது