ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு மைத்திரிபால சிறிசேன அழைப்பு!

213af326 e0eb5181 president 850x460 acf cropped
213af326 e0eb5181 president 850x460 acf cropped

தனது வீட்டுக்கு வருகைதந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழு, அதன் பொலிஸ் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்திருந்தது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26ம் திகதி ஆஜராகுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தன்னால் பொலிஸ் பிரிவில் ஆஜராக முடியாதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தனது வீட்டுக்கு வருகைதந்து, வாக்குமூலத்தை பெறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குறித்த தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு சென்று வாக்குமூலத்தை பெறவுள்ளனர்.