கிளிநொச்சியில் ஹெரோயினுடன் பாடசாலை மாணவர்கள் நால்வர் கைது

kaithu1

கிளிநொச்சி, நகர்புற பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் நால்வர் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதாவது 2020ஆம் ஆண்டில் கல்வி கற்கும் உயர்பிரிவு மாணவர்கள் நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை வைத்து இம்மாணவர்கள் பாடசாலை மலசலகூடத்தில் போதைப்பொருள் பாவணையில் ஈடுப்ட்டிருந்த நிலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.