வாள் வெட்டுக்கு உள்ளாகி மாணவன் பலி!

AA101EAC 582A 47DC 95DB FBEEB200533D
AA101EAC 582A 47DC 95DB FBEEB200533D

ஏறாவூர் – செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்குள் இடம்பெற்ற மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த மோதலில் அதே பகுதியை சேர்ந்த 15 வயதான மாணவனே வாள் வெட்டுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குழுக்கள் இடையே ஏற்பட்ட வாய்த்தர்கம் அதிகரித்த பின்னர் குழு மோதலாக மாறியுள்ள நிலையில் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்துள்ள மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் ஏறாவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.