கிரிக்கட் சங்கங்கள் மற்றும் வீரர்களுடன் இணைந்து இலங்கையின் விளையாடுக்களில் எந்த இடத்தில் தவறுகள் இடம்பெற்றுள்ளன என்பது தொடர்பில் ஆராய்வதே ஒரு விளையாட்டு அமைச்சராக தனக்குள்ள மிகப்பெரிய சவால் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.