எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர கணித – உயிரியல் துறை மாணவர்களுக்கு, வட மகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து தொன்டமானாறு வெளிக்கள நிலையம் நடாத்தும் மதிப்பீட்டுப் பரீட்சைகள் நாளை 24 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது என வெளிக்கள நிலையத்தின் இணைப்பாளர் அறிவித்துள்ளார்.
கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கு இந்தப் பரீட்சைகள் உதவும் என்பதால் வட மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றுவதை அந்தந்தப் பாடசாலை அதிபர்கள் உறுதி செய்யுமாறு அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.