அம்பாறை மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் வெடிபொருள் காணப்படுவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த பகுதியில் விமானப்படையினரால் யுத்த காலங்களில் உபயோகிக்கப்பட்ட வெடிபொருள் ஒன்றின் பகுதி மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வெடிபொருளை ஆராய்ந்து உரிய அனுமதியைப் பெற்று செயழிலக்கச் செய்ய பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதேவேளை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவட்டாய் என்னும் பிரதேசத்தில் கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி காணியொன்றில் புதையுண்டிருந்த ரி-81 மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.