சர்வதேச விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்காக காத்திருப்பு

download 1 6
download 1 6

இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சிவில் விமான சேவை அதிகார சபை, சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு தற்காலிக திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் ஜி.ஏ.சந்திரசிறி அறிவித்துள்ளார்.

விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குச் செல்ல அனுமதிக்கும் நாடுகளின் பட்டியலும் இன்னும் தொகுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதனை அடுத்து ஓகஸ்ட் மாதத்தில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தபோதும் இந்த நடவடிக்கையை மேலும் தாமதப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்னர் அறிவித்திருந்தார்.