ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனை

jjjjj

18 கிராம் நிறையுடைய ஹெரோயினை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை உள்ளிட்ட 2 குற்றச்சாட்டுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இரு பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கனேபொல இன்று தீர்ப்பளித்துள்ளார்.

கயான் இந்திரஜித் எனப்படும் குறித்த பிரதிவாதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கடந்த 2013 ஒக்டோபர் 30 ஆம் திகதி கிரேண்ட்பாஸ் – பலாமரச்சந்தி பகுதியில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.