நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை!

powercut 1
powercut 1

நாடளாவிய ரீதியில் கடந்த 17 ஆம் திகதி ஏற்பட்ட மின் விநியோகத்தடை தொடர்பில் ஆராயுமாறு நியமிக்கப்பட்ட குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை நாளை புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கெரவலபிட்டி உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் நாடளாவிய ரீதியில் கடந்த 17 ஆம் திகதி பகல் 12.30 மணி தொடக்கம் சுமார் இரவு 10 மணிவரை மின் விநியோகத்தடை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து மின்விநியோகத்தடை குறித்து ஆராய்வதற்காக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் பணிப்புரைக்கமைய அமைச்சின் செயலாளரால் 9 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. குழு நியமிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் திங்கட்கிழமை மாலை அதன் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

பேராசிரியர் ராகுல அத்தலகே தலைமையில் மின்சக்தி அமைச்சினால் இந்த குழு நியமிக்கப்பட்டிருந்தாலும் இதில் இருவரை தவிர ஏனைய 7 உறுப்பினர்களும் துறையில் நிபுணத்துவம் பெற்ற வெளியாட்களாவர் என்றும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.