இலங்கை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த 174 இந்தியர்கள் இந்திய விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில் இன்று (செவ்வாய்கிழமை) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதுடில்லி நோக்கி புறப்பட்டுச் சென்றதாக செய்திகள் வெளியாகின.
இந்திய விமான சேவைக்குச் சொந்தமான ஏ.ஐ.282 ரக விமானத்தில் அவர்கள் இவ்வாறு சென்றுள்ளனர்.
இதேபோல் இதற்கு முன் பல சந்தர்ப்பங்களில் இலங்கையில் பணி புரிந்து வந்த பல இந்தியர்கள் இந்திய விமான சேவையின் விசேட விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு மீண்டும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.