கொதித்தெழ வைத்துள்ள சிங்கள இனவாதிகளை விக்னேஸ்வரனின் உரை: சிவாஜிலிங்கம்!

.கே.சிவாஜிலிங்கம்
.கே.சிவாஜிலிங்கம்

இலங்கையில் புதிய நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் சத்திய பிரமாணம் மேற்கொண்டு சபாநாயகர் தெரிவு இடம்பெற்ற பின்னர், அவருக்கு வாழ்த்து தெரிவித்து, சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது என தமிழ்த் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பண்டாரவன்னியனின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது அதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுடைய வரலாற்றை எங்களுடைய விருப்பங்களை நாம் தெரிவிப்பது அவர்களுக்கு கொதிப்பினை ஏற்படுத்துகிறதென்றால் எங்களை விட்டுவிடுங்கள் நீங்கள் உங்களுடைய வழியில் செல்லுங்கள் நாங்கள் எங்களுடைய வழிகளை பார்த்துக் கொள்கின்றோம் என எண்ணத் தோன்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.