பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து சுற்றுலா நிபுணர்களின் சங்கம் இன்றைய தினம் கொழும்பு ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தின் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதியினால் குத்தகை நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்ட போதும், அதனை குறித்த நிறுவனங்கள் வழங்க வில்லை என தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.