யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடத்தின் 3ஆம், 4ஆம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளன என கிளிநொச்சி வளாக பிரதிப் பதிவாளர் ஞானபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி வளாகத்தின் விவசாய பீடத்தின் முதலாம், நான்காம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த நிலையில், விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள விவசாய பீட மாணவர்கள் எதிர்வரும் முதலாம் திகதியே விடுதிகளுக்கு திரும்புமாறு கோருவதாக கிளிநொச்சி வளாக பிரதிப் பதிவாளர் ஞானபாஸ்கரன் கூறியுள்ளார்.