தற்போது பாரிய அளவில் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

44 2
44 2

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தற்போது பாரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று காலை கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் பாரிய சிக்கலாக இருந்த போதைப்பொருள் வர்த்தகம், கப்பம் பெறுதல் மற்றும் பாதாள உலக குழு செயற்பாடுகள் பாரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இதுவரையில் பாரிய வெற்றியடைந்துள்ளதாகவும் தொடர்ந்து அதனை கடைபிடிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.