நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களால் கொரோனா பரவும் ஆபத்து!

625.500.560.350.160.300.053.800.900.160.90 31
625.500.560.350.160.300.053.800.900.160.90 31

இந்தியாவிலிருந்து படகுகள் மூலம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்துள்ளதாக தொற்று நோய்பிரிவின் பிரதம அதிகாரி சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினர் கடும் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நுழைபவர்களின் எண்ணிக்கையும் ஆபத்தும் அதிகமாக உள்ளது.

இவ்வாறு நுழைபவர்களில் ஒருவராவது கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதனால் எங்கள் சமூகத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.