பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இதில் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஐரோப்பாவில் இடம்பெற உள்ள கார்பந்தய போட்டியில் பங்குகொள்ள உள்ள டிலந்த மாலகமுவவிற்கு அரச அனுசரனை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.