மேலும் 211 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

srilankan airlines 1

ஹொங்கொங், கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து மொத்தமாக 211 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஹொங்கொங்கிலிருந்து ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -1425 என்ற விமானத்தில் மொத்தமாக 42 இலங்கையர்கள் நேற்றிரவு 8.30 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மேலும், கட்டார், தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான  கியூஆர் -668 என்ற விமானத்தில் 12 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேபோல் குவைத்திலிருந்து ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -230 என்ற விமானத்தில் 157 இலங்கையர்கள் இன்று அதிகாலை 2.36 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரையும் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.