எதிர்வரும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மற்றுமொரு தேர்தல்!

provincial council
provincial council

கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மற்றுமொரு தேர்தலை எதிர் கொள்ளவுள்ளனர் இலங்கை மக்கள்.

இதன்படி கடந்த பல வருடங்களாக கலைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருட தொடக்கத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதியில் அல்லது பெப்ரவரி மாத ஆரம்ப வாரத்தில் இந்த தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே திகதியில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்போது உள்ள விகிதாசார முறையில் இத்தேர்தலை நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.