பொது மக்களிடம் பலவந்தமாக பணம் கோரிய நபர்களை தாக்கிய பிரதேசவாசிகள்!

f63a0508f15522cdd92e2a9090280ad7
f63a0508f15522cdd92e2a9090280ad7

நாரம்மல நகரில் பொது மக்களிடம் பலவந்தமாக பணம் கோரிய இரு நபர்களை பிரதேச மக்கள் தாக்கி,காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இருவரும் பொது மக்களிடம் பலவந்தமாக பணம் கோரியுள்ள நிலையிலே பிரதேச மக்கள் இவ்வாறு தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் ஒருவரிடம் இருந்து கூரிய கத்தி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இருவரில் ஒருவர் பூஜாபிட்டிய பிரதேசத்தினை சேர்ந்தவர் என்பதுடன் மற்றும் ஒருவர் மினுவங்கொட பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.