பரீட்சைகள் காரணமாக வழங்கப்படவுள்ள விடுமுறைகள் தொடர்பான விபரங்கள்

aaaaaaa

உயர் தர பரீட்சை ஒக்டோபர் மதம் 12 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

2020 ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சையினை  ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடாத்துவதற்கும், உயர் தர பரீட்சையினை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நடாத்துவதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 2020 ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில்  மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஆரம்பித்து, டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி நிறைவடையவுள்ளன.

2020 ஆண்டிற்கான முன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 திகதி வரை வழங்கப்படவுள்ளன.

இதேவேளை 2021 ஆம் ஆண்டு முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஜனவரி மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020 ஆண்டிற்கான சாதாரணதர பரீட்சை, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி ஆரம்பித்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சகல பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளன.

இதேவேளை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை கல்வி விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சையின் பின்னர் மீண்டும் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.