இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் வவுனியா கிளையின் அனுசரணையில் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா வைரஸ் தொடர்பான மாணவர்களுக்கான விழிப்புணர்வு பதாதைகள் நூறு பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று காலை மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் தாய் சேய் நல வைத்திய அதிகாரி தா.ஜெயரதன் , வவுனியா சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி திருமதி பாஸ்கரன் , சுகாதார கல்வி அதிகாரி எம்.கேதீஸ்வரன் , மாவட்ட பல் வைத்திய அதிகாரி ஜெஸ்லியன் , சிரேஷ்ட சுகாதார பரிசோதகர் க . தியாகலிங்கம் , வவுனியா கல்வி வலயப்பணிப்பாளர் மு. இராதாகிருஷ்ணன் , இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் வவுனியா கிளையின் தொண்டர்கள், ஊழியர்கள்,பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர் .
இதேவேளை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்திலும் பதாதைகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளதை அடுத்து ஏனைய பாடசாலைகளிற்கும் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.