நல்லிணக்கமுள்ள இலங்கைக்கு ஆதரவளிப்பதாக கனடா அறிவிப்பு

EgfW52eUcAA2IYm

சுபீட்சமான நல்லிணக்கமுள்ள இலங்கைக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என்று கனடா அறிவித்துள்ளது.

கனேடிய உயர்ஸ்தானிகர் நேற்று இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தபோது இதனை கருத்தை தெரிவித்துள்ளார்.

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேற்று கொழும்பில் சந்தித்து தேர்தல் வெற்றிக்காக தமது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இதன்பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்திப்பு சுமுகமாக இருந்தது என்று இருவரும் டுவிட்டரில் தகவல்களை பரிமாறியுள்ளனர்.