பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு

12 3

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மத்திய செயற்குழு கூட்ட அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

சுமந்திரன்- துரைராசசிங்கம் கூட்டணி மேற்கொண்ட தேசியப்பட்டியல் ஆசன சதி முயற்சி குறித்து தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.