ஹெரோயின் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண்கள் இருவர் மீடியாகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 6 கிராம் 60 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத்தின் மாமியாரும் அவரது மகனின் மனைவியுமான மருமகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த பெண்களிடம் இருந்து 466,100 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.